தமிழகத்தில் 736 பேருக்கு கொரோனா தொற்று: 9 பேர் உயிரிழப்பு

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,01,446 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 736 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,25,467 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து 772 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,80,667 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் நேற்று உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக தஞ்சாவூர் 2 பேர், சென்னை, கோவை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சேலம், திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 36,463 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில்  இருப்பவர்கள் 8,337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 107 பேர், கோவை 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை  நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது.

Related Stories: