இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் விடுதலை: மீட்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு உறவினர்கள் கண்ணிர்மல்க நன்றி

நாகை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சொந்த ஊர் திரும்பிய மீனவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மீட்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு உறவினர்கள் கண்ணிர்மல்க நன்றி தெரிவித்தனர்.கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இலங்கை அரசால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் 18 மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து விமானம் மூலம் 27.11.21 காலை சென்னை விமான நிலையத்திற்கு விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து நாகை மீனவர்கள் 18 மீனவர்கள்27.11.21 மாலை சொந்த கிராமத்திற்கு வந்தடைந்தனர். நாகை மீன்பிடி துறைமுகம் வந்த மீனவர்களை கிராம நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கண்ணிர்மல்க வரவேற்றனர். விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த  தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ள மீனவர்கள், இலங்கை வசம் சிக்கியுள்ள இரண்டு படகுகளையும் விரைந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: