சென்னை: சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை இல்லாத அளவுக்கு தென் மாவட்டங்களில் மழை பெய்து இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகப்படியான மழை பெய்தது, காயல்பட்டினத்தில் 306 மிமீ, தூத்துக்குடியில் 266 மிமீ, திருச்செந்தூரில் 248 மிமீ மழை பெய்து இருக்கிறது. மாஞ்சோலை எஸ்டேட்டில் நேற்று முன்தினம் 20 செமீ மழை பெய்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு மழையாகும். இதனால் பாபநாசம் அணை மற்றும் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வருகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.