சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 2,011 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 1,675 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். இதை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்.