வணிகர்கள் குறித்து அவதூறு பேச்சு மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் விக்கிரமராஜா புகார்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா டிஜிபி அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் குன்றத்தூர் சி.எஸ்.ஐ கிருத்துவ ஆலயத்தில், பேராயர் சாமுவேல் முன்னிலையில் நடந்த ஆராதனை கூட்டத்தில், பியூலா செல்வராணி ஆற்றிய ஆராதனையில், வணிகர்களை ஆபாசமாக சித்தரித்தும், குறிப்பாக நாடார் இன துவேஷத்தை முன்னிலைப்படுத்தியும், கலவரத்தை தூண்டும் விதமாக ஆற்றிய உரை, சமூக வலைத்தளங்களில் பரப்பி விடப்பட்டுள்ளது. எனவே, பியூலா செல்வராணி மற்றும் பேராயர் சாமுவேல் இருவர் மீதும், காவல் துறை சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்து நீதியை நிலைநாட்டிட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: