சென்னை: தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 11வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தயக்கம் காட்டாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மின் தங்கசாலை பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 155 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 1 கோடியே 1 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும், சுமார் 72 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்த வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார்.