சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் எந்த வாக்குவாதமும் நடைபெறவில்லை. மகிழ்ச்சியாக கூட்டம் நடந்தது. கட்சியில் சில கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். அதற்காக வருத்தம் தெரிவித்தோம். அதிமுகவின் தொண்டர்கள், பொதுமக்கள் எண்ணங்களில் வேதா இல்லம் கோயிலாக இருக்கிறது.