ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் விஜயா ராணி தகவல்

சென்னை: சென்னை கலெக்டர் விஜயா ராணி வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் கூட்டத்தினை சென்னை மாவட்ட ஆட்சியர் வரும் டிசம்பர் 16ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும். எனவே சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரண்டு பிரதிகளில், விண்ணப்பமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், 62, ராஜாஜி சாலை, சென்னை-600001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: