பூந்தமல்லி: தமிழகத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் முக்கியமானது. இங்கு சென்னை, புறநகர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அந்த காணிக்கைகளை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எண்ணுவார்கள்.