சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்; ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவல் சார் ஆய்வாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதோடு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளிவிடுமோ என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. கடினமான பணிகளில் ஈடுபடும் காவல் துறையினரின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்கும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். காவல் துறை சிறப்பு சார் ஆய்வாளரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை பெற்று தர வேண்டும்.  மோட்டார் வாகன ஆய்வாளரும் பணியில் இருக்கும் போது உயிரிழந்ததால், காவல் துறை சிறப்பு சார் ஆய்வாளரின் குடும்பத்திற்கும் வழங்கியதைப் போல முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: