சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநிலச் சட்டமன்றங்களின் தலைவர்கள் பங்கு ஏற்கும் 52வது மாநாட்டில், தமிழ்நாடு சட்டமன்றத்தின் தலைவர் அப்பாவு ஆற்றிய உரை பாராட்டுக்கு உரியது. அவர் தம் உரையில், மக்கள் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடுகள், பேரவையின் அதிகாரங்கள் செயல்பாடுகளை எடுத்துக்கூறி, இன்று சட்டமன்றங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.