சென்னை: தமிழ்நாட்டுக்கு 8,000 மெ.டன் டிஏபி உரமும், 10,000 மெ.டன் பொட்டாஷ் உரமும் கூடுதலாக வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு 29,856 மெ.டன் உரத்தை ஒன்றிய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இதேபோல் கங்காவரம், மங்களூர் துறைமுகங்களில் இருந்து 10,700 மெ.டன் ஐ.பி.எல். யூரியாவை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. தொடர்ந்து கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் இருந்து 8,000 மெ.டன், கொரமண்டல் யூரியா உரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 60,559 மெ.டன் யூரியா உரமும், 18,245 மெ.டன் டிஏபி உரமும் கையிருப்பில் உள்ளன. மேலும் 28,377 மெ.டன் பொட்டாஷ் உரமும், 1.37 லட்சம் மெ.டன் காம்ப்ளக்ஸ் உரமும் இருப்பில் உள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.