மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதால் தொடரப்பட்ட வழக்கில் புதிய மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி

சென்னை: மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதால் தொடரப்பட்ட வழக்கில் புதிய மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடைபெற்றதாக வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். இந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். உரிய ஆதாரங்களுடன் வழக்கறிஞர் புகழேந்தி புதிய மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: