திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதையில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது: கடந்த 18ம் தேதி முதல் டிக்கெட் இருந்தும் கனமழையால் வரமுடியாத பக்தர்கள் வருகிற 30ம் தேதிக்குள் தரிசிக்க அதே டிக்கெட்டுகள் கொண்டு அனுமதிக்கப்படுவார்கள். அதற்குள் வர முடியாத பக்தர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் 6 மாதங்களுக்குள் தேதி மாற்றிக் கொள்ள தேவஸ்தான சாப்ட்வேர் அப்ளிகேஷனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.