தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர்பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு.!

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான தமிழ்நாட்டைச் சார்ந்த பாராளுமன்ற முஸ்ஸிம் உறுப்பினர்களின் இறுதி வாக்காளர்பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான தமிழ்நாட்டைச் சார்ந்த பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு,  24.11.2021 அன்று வெளியிடப்படுகிறது.

இவ்வாக்காளர் பட்டியல் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, இரண்டாவது தளம், தலைமைச்செயலகம், சென்னை-600 009, முதன்மைச் செயல் அலுவலர், தமிழ்நாடு வக்ஃப் வாரியம், சென்னை-600 001 மற்றும் அனைத்து மண்டல வக்ஃப் கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள் ஆகியவற்றில் வெளியிடப்படுகிறது. தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: