சென்னை: சென்னையில் ஒரேநேரத்தில் 150க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 6 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உரிய அனுமதியின்றி செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம், தியாகராய நகர், அண்ணாநகர், வடபழனி, அடையாறு, திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.