கொல்கத்தா: வரும் 29ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூடும் நிலையில், நாளை மேற்குவங்கத்தில் இருந்து இரண்டு நாள் பயணமாக முதல்வர் மம்தா டெல்லி செல்கிறார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். வருகிற 29ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால், இந்த அமர்வில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான செயல்முறைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஒன்றிய பாஜக அரசை, எதிர்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகள் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் இறந்ததற்கான காரணத்தை சுட்டிக் காட்டி கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.