சென்னை: திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் விரைவாகக்கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.