அம்மா மருந்தகங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும்: எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 தற்போதைய அரசு, நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, அம்மா மருந்தகங்களுக்கு மூடு விழா நடத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மக்களின் உயிர் காக்கும் தரமான மருந்துகளை சலுகை விலையில் விற்கும் அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தகங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும், மக்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவை அரசு உடனே கைவிடவேண்டும்.

Related Stories: