வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே கனமழையால் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள மலைச்சாலையில் நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக எல்லையில் ஆந்திர மாநிலம் செல்லக்கூடிய மலைச்சாலை உள்ளது. இச்சாலை ஆந்திர மாநிலம் குப்பம், ராம குப்பம், வீரணமலை வழியாக தமிழகத்திற்கு வரக்கூடிய பிரதான சாலை. இந்த சாலை தமிழக எல்லையான வெலதிகமாணிபெண்டா, சிந்தகாமணி பெண்டா, ஆகிய மலைச்சாலை வழியாக அண்ணா நகர், தும்பேரி வாணியம்பாடி வரக்கூடிய சாலையாகும். இந்த சாலை 2 ஆயிரம் அடி மலையில் 10 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டுள்ளது.