விவசாயிகளின் அறப்போராட்டமே வென்றது: நடிகர் சூர்யா பாராட்டு

சென்னை: மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதுகுறித்து நடிகர் சூர்யா நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உழவே தலை. விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாயப் பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபோல், நடிகர் கார்த்தியும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

Related Stories: