திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 01.01.2022 ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்களை சுருக்க முறையில் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வருகின்ற 27, 28 ஆகிய இரண்டு சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 3657 வாக்குச் சாவடிகளில் உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து திரும்ப அளிக்கலாம்.