நீர்வளத்துறையில் 5 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நீர்வளத்துறையில் 5 கண்காணிப்பு பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை நீர்வள ஆதார விவர குறிப்பு மைய இணை தலைமை பொறியாளர் சுரேஷ்குமார் நீர்வளத்துறை பாசன இணை தலைமை பொறியாளராகவும், திருநெல்வேலி நீர்வளத்துறை திட்ட வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் தாமிரபரணி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராகவும், திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன கண்காணிப்பு பொறியாளர் காஜா மொகைதீன் தஞ்சாவூர் நீர்வளஆதார விவர குறிப்பு மைய கண்காணிப்பு பொறியாளராகவும், திருச்சி பொதுப்பணித்துறை ஊழியர்கள் பயிற்சி நிறுவன கண்காணிப்பு பொறியாளர் திலகவதி பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன கண்காணிப்பு பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: