சென்னை: சென்னையில் நாளை திடீர் காற்றுடன் கூடிய மழை தொடரும், ஆனால் அச்சுறுத்தும் அளவிற்கு மழை பெய்யாது என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். வடசென்னை மற்றும் திருப்பதிக்கு இடைப்பட்ட பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அரசு நீர் திறப்பு அறிவிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு வரவேண்டிய மழை அனைத்தும் பாண்டிச்சேரி- விழுப்புரம்-திருவண்ணாமலை பகுதிகளில் கொட்டி தீர்த்தது.