ஆலந்தூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (31). இவர் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதுகுறித்து தெரியவந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.