திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின்நிலைய அணுவாற்றல் துறை இயக்குனருக்கு காஞ்சிபுரம் எம்பி செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்,’கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு கல்பாக்கம் அணுவாற்றல் துறை பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். கல்பாக்கம் நகரியத்தில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு இடையூறாக மூடப்பட்ட வாயிற்கதவுகளை திறக்க வேண்டும். மேலும், கல்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற மக்களை வஞ்சிக்கும் வகையிலான நிலா கமிட்டி நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.