சென்னை: தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிரந்தர குழுவை அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.கனகராஜ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும், விமானங்களிலும் அறிவிப்புகளை தமிழில் மேற்கொள்ள வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கையாகும். அத்துடன் வெளிநாடுவாழ் தமிழர்களுக்காக நிரந்தர குழுவை அமைக்கவும், தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கையாகும்.