ஆவடி: லிப்ட் கேட்பது போல் நடித்து, தனியார் கம்பெனி அதிகாரியிடம் பைக், செல்போன், மோதிரம், கூகுள் பே மூலம் ₹13 ஆயிரத்தை, மற்றொரு வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்து விட்டு, தப்பி சென்ற மர்மநபரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.சென்னையை அடுத்த குன்றத்தூர், எருமையூர், கலைஞர் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (24). தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் அஜித்குமார், தனது நண்பரை பார்க்க பூந்தமல்லிக்கு பைக்கில் புறப்பட்டார். ஆவடி அருகே ஆயில்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர், அஜித்குமாரிடம் லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து அவர், வாலிபரை பைக்கில் ஏற்றி கொண்டு சென்றார்.