சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இக்கோயில்கள் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என வருவாய் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி, 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்களில் அறங்காவலரை உதவி ஆணையர் நியமிக்கலாம். 10 ஆயிரத்துக்கு குறையாமல்ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் வரும் கோயில்களில் மாவட்ட குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் மூன்று அறங்காவலர் குழுவை இணை ஆணையர் நியமிக்கலாம்.ரூ.2 லட்சத்துக்கு குறையாமல்ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் வருவாய் வரும் கோயில்களில் மாவட்ட குழுக்களின் பரிந்துரையின் பேரில் மூன்று அறங்காவலர்கள் கொண்ட குழுவை ஆணையர் நியமிக்கலாம்.ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் வரப்பெறும் கோயில்களில் 5 பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட பெரிய கோயில்களில் அறங்காவலர்கள் குழு நியமனம்: அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை
- வாரியம்
- மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
- பழனி
- திருச்செந்தூர் முருகன் கோவில்
- தமிழ்நாடு அரசு
- தொண்டு அறக்கட்டளைகள்