தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 14,138 பாசன ஏரிகளில் 5,906 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் 14,138 பாசன ஏரிகளில் 5,906 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது.  தமிழ்நாட்டில் பரவலாக தொடர்மழை பெய்துவருவதால் அனைத்து மாவட்டங்களிலும் பாசன ஏரிகள் நிரம்பிவருகிறது. தமிழ்நாட்டில் 3,108  பாசன ஏரிகள் 75 சதவிகிதம் முதல் 99 சதவிகிதம் வரை நிரம்பிவருகிறது. 1943 பாசன ஏரிகள் மொத்த கொள்ளளவில் 51 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: