சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட நல்லமநாயுடு திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி.யான நல்லமநாயுடு, 1997ல் பள்ளி ஓய்வுக்கு பின்னர் பெரம்பலூரில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இதனிடையே கனமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.