வேலூர்: வேலூர் காகிதப்பட்டறை மலையில் இருந்து பாறை உருண்டு குடிசை மீது விழுந்ததில் பெண் பலியானார். வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை குறைந்திருந்தது. மேலும் நேற்று காலை லேசான வெயில் காய்ந்தது. இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் தொடங்கி வேலூரில் சுமார் ஒரு மணிநேரத்துக்கு கனமழை நீடித்தது. இந்நிலையில் மதியம் 2 மணியளவில் வேலூர் காகிதப்பட்டறை மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் இருந்த பல டன் எடை கொண்ட பாறை திடீரென உருண்டு அங்குள்ள குடிசை வீடு மீது விழுந்தது.