சென்னை 60 நடமாடும் மருத்துவ முகாம்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார் Nov 14, 2021 அமைச்சர் தமோ அன்பரசன் குன்றத்தூர்: குன்றத்தூரில் மழைக்குப் பின் தொற்றுநோய் பரவலை தடுக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவ முகாம்களை நேற்று மாலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் குடியிருப்புகள், வயல்வெளிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. தற்போது மழை விட்ட நிலையில், பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று மாலை குன்றத்தூர் பகுதியில் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடமாடும் மருத்துவ முகாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, 60-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவ முகாம்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து