ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் அரசின் சார்பில் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் இத்திட்டத்தின் மூலம் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலைகள் உற்பத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விசைத்தறி கூடங்களில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 67 லட்சம் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. 76 சொசைட்டிகள் மூலம், இப்பணிகள் நடைபெற்று வருகின்றது.