சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ₹5 கோடி ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், சுமார் 50 லட்சம் பேர் விசைத்தறி தொழிலையும், சுமார் 5 லட்சம் பேர் கைத்தறி தொழிலையும் நம்பி வாழ்கிறார்கள். ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழில்களுக்கு நூல்தான் மூல ஆதாரம். இப்போது மீண்டும் ஒரு சிப்பம் நூலின் விலை ₹1000 உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.