சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட கேரள அரசின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அனுமதி அளித்து, கடந்த 5ம் தேதி கம்பத்தில் உள்ள நீர் ஆதாரத் துறை செயற் பொறியாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வரும் கேரள அரசிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இதற்கு மறுநாளே, கேரள மாநில வனத்துறை அமைச்சர், மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தனக்கு தெரியாது என்றும், இதுகுறித்த முடிவு அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். தலைமை வனவிலங்கு காப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.