சென்னை: கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரை பறித்துள்ளது என்றும் பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.