சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த 6ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடக்கிறது. வெள்ளப்பெருக்கால் பாலங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.