சென்னை தேசிய திறனடைவு கணக்கெடுப்பு தேர்வில் மொழிப்பாடத்தில் தமிழுக்கு பதில் இந்தி Nov 13, 2021 புதுச்சேரி: பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்ட இடைவெளிகளில் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே, தேசிய திறன் கணக்கெடுப்பு தேர்வை (நாஸ்) நடத்தி வருகிறது. இந்தாண்டு இந்த கணக்கெடுப்பு நேற்று நடந்தது. இந்த தேசிய திறனடைவுக் கணக்கெடுப்பு 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் 313 பள்ளிகளில் 15,749 மாணவ, மாணவிகளிடம் நேற்று இந்த கணக்கெடுப்பு நடந்தது. இதில் சில பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் மொழிபாடமான தமிழ் இல்லை. அனைத்து கேள்விகளும் இந்தியில் இடம் பெற்றிருந்தது. அதேநேரத்தில் 10ம் வகுப்பில் மட்டும் மொழிபாடம் இருந்தது. இதை பார்த்ததும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இந்தி கேள்விகளை தவிர்த்து மற்ற பாடத்திற்கான பதில் தருமாறு தெரிவித்தனர்.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்