ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் தாமேலேரிமுத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக தனியார் ஏஜென்சி ஊழியர்கள் வந்தனர். சிறிது நேரத்தில் பணத்தை நிரப்பி விட்டு கவனக்குறைவாக ஒரு பையில் கட்டுக்கட்டாக பணத்தை வெளியில் விட்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வெற்றி குமார் என்ற வாலிபர் அங்கு ஒரு பை இருந்ததை கண்டார். அதனை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.