அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரிய வழக்கு: எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:மதுசூதனன் மறைவையொட்டி அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரிய வழக்கு நவ.23-ம் தேதிக்குள் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் முடிவு என்று மனுதாரர் புகார் அளித்துள்ளார்.   

Related Stories: