சென்னை: சென்னையில் பரவலாக மழை பெய்து வரக்கூடிய சூழலில் சென்னை கே.கே. நகர் சாலையில் திடீரென பள்ளம் தோன்றியிருக்கிறது. சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள நெசப்பாக்கத்திற்கு அருகே நேற்று மாலை 7 மணியளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாலைக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இந்த பள்ளம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் சம்பவத்தால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ வாகனம் பள்ளத்தில் சிக்கியது. வாகனத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது பள்ளம் மூடுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று 3 இடங்களில் பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக கே.கே.நகர் பகுதியில் மழை காலங்களில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்குவது வழக்கம்.