சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸில் மலை கிராம பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி குன்றிமலை கிராமத்தைச் சேர்ந்வர் மசனன். இவரது மனைவி லில்லி. நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று அதிகாலை லில்லிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடம்பூரில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரப்புலிசாமி, மருத்துவ உதவியாளர் விஜய் ஆகியோர் கர்ப்பிணி பெண் லில்லியை ஏற்றிக்கொண்டு கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.