சென்னை: வில்லிவாக்கத்தில் தண்ணீர் சூழ்ந்த பகுதியை ஆய்வு செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது, அதிமுக ஆட்சியில் பக்கீங்காம் கல்வாய் முடியும் எண்ணூர் பகுதியில் இருந்த அடைப்பை நவீன இயந்திரம் மூலம் அகற்றினோம். முந்தைய காலத்தில் வெள்ள நீரால் மூழ்கிய வடசென்னை பகுதி பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. தேவையான இடத்தில் வடிகால் அமைத்துள்ளோம். அதிமுக அரசின் நடவடிக்கையால் தான் தாழ்வான பகுதிகளில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு இடங்களில் வடிகால்கள் அமைத்ததன் காரணத்தால் இன்று இந்த கனமழையிலும் பல்வேறு இடங்கள் நீர் தேங்காத சூழல் உள்ளது.