சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை 2வது நாளாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய அதிகனமழையால், பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடின. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.