நடிக்காத படத்துக்கு விளம்பரம் தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார்

சென்னை: அன்பு செல்வன் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக கவுதம் மேனன் நடித்துள்ளதாகவும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கி உள்ளார் என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ‘அன்பு செல்வன் படத்தில் நான் நடிக்கவில்லை’ என்று கவுதம் மேனன் மறுத்தார். இதையடுத்து அன்புசெல்வன் படக்குழுவினர் கவுதம் மேனன் நடித்ததில் சில காட்சிகளை வீடியோவாக வெளியிட்டனர். படத்தின் பெயர் அன்பு செல்வன் என்று மாற்றப்பட்டதே குழப்பத்துக்கு காரணம் என்றும் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் அன்பு செல்வன் படக்குழுவினர் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார் அளித்துள்ளார். அதில், ‘ஜெய் கணேஷ் என்பவர் இயக்கத்தில் ‘வினா’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு. 2018ம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்கு பிறகு படத்தின் பணிகள் நடக்கவில்லை. தற்போது வினோத் குமார் இயக்கத்தில் அந்த படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன். எனவே அன்புசெல்வன் படத்தின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: