சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையொட்டி அரசு அனுமதித்த நேரத்தை கடந்து, பட்டாசு வெடித்ததாக 2,278 பேர் மீதும், சென்னையில் 1,008 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காற்று மற்றும் ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்பட, தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. மேலும், அரசு அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அரசின் அறிவுறுத்தலை மீறி பலரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பலர் பட்டாசு வெடித்தனர். இதையடுத்து அரசின் அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.