ஊட்டி: தொடர் விடுமுறையால் ஊட்டியில் நேற்று 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரண்டாவது சீசன் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தேனிலவு தம்பதிகள் வருகையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.