சென்னை: சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. 2022ம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை, ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்து இருக்கிறது. வழக்கமாக, இந்தியாவின் 20 விமான நிலையங்களில் இருந்து, ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்வர். ஆனால், அந்த எண்ணிக்கையை பத்தாக குறைத்து விட்டனர். சென்னை விமான நிலையத்தின் பெயர், பட்டியலில் இல்லை.