ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசாகவும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் சுமார் 3 மணிநேரம் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்ய துவங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.